districts

img

ஓபிஎஸ் தாயார் காலமானார்  அமைச்சர் - சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

தேனி, பிப்.25- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார்  பழனியம்மாள் நாச்சியார்( வயது 95). வயது மூப்பினால் உடல் நலிவுற்றிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு தேனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு உடல்நிலை மோசமாகவே பெரிய குளத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். தகவலறிந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து  பெரியகுளத்திற்கு சனிக்கிழமையன்று காலை வந்தார். பழனியம்மாள் நாச்சியாரின் உடல் பெரியகுளம் தெற்கு  அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக சார்பில் ஊரக வளர்ச்சி-உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினார். உடன் கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம்  சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகா ராஜன், சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்டச் செயலா ளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இருந்தனர். ஓபிஎஸ்.ஆதரவாளர்களான வெல்லமண்டி நட ராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மனோஜ்பாண்டி யன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினரும் பெரியகுளம் தொகுதி முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர், மாவட்டச் செயலா ளர் ஏ.வி. அண்ணாமலை, மூத்த தலைவர்கள் கே.ராஜப்  பன், எல்.ஆர்.சங்கரசுப்பு,மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சு.வெண்மணி, ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் உள்ளிட்ட பல்வேறு  கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.பின்பு சனிக்கிழ மையன்று மாலையில் நகராட்சி மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

;